சென்னையில் மாநகர பேருந்துகளின் டிக்கெட்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் பல்லாவரம் பஸ் டிப்போவில் சென்னை மாநகரப் பேருந்துகளில் டிக்கெட்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்காக மாநகரப் போக்குவரத்து கழகம் மூலம் பல்லாவர மாநகர போக்குவரத்துக் கழக கண்டக்டர்களுக்கு யுபிஐ மற்றும் கார்டு மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் புதிய கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த திட்டம் படிப்படியாக சென்னையில் உள்ள அனைத்து டிப்போக்ககளுக்கும் விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளது. இதனை பயன்படுத்தி பயணிகள் தங்கள் செல்போன்களின் மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம். மேலும் தமிழ்நாடு உள் கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அனைத்து மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் க்யூ ஆர் அடிப்படையில் பணம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் பயணிகள் பயணம் செய்யும்பொழுது இந்த கியூ ஆர் கோடுகளை கண்டக்டர் மற்றும் ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் காட்டலாம்.