சென்னிமலை முருகன் கோவிலில் நன்கொடை செலுத்த க்யூ ஆர் கோடு வசதி அறிமுகம்

February 15, 2024

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் நன்கொடை செலுத்துவதற்காக க்யூ ஆர் கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னிமலை முருகன் கோவிலுக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு தரிசனத்திற்கு தனியாகவும், நன்கொடைகள் செலுத்த திருவிழா நேரத்திலும் வரிசையில் காத்திருந்து நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்களுக்கு சிரமம் இருந்து வருகிறது. இதனை தவிர்க்க பக்தர்கள் நன்கொடை செலுத்துவதற்காக க்யூ ஆர் கோடு வசதியினை இந்து சமய அறநிலைத்துறையினர் செய்தனர். இது […]

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் நன்கொடை செலுத்துவதற்காக க்யூ ஆர் கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னிமலை முருகன் கோவிலுக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு தரிசனத்திற்கு தனியாகவும், நன்கொடைகள் செலுத்த திருவிழா நேரத்திலும் வரிசையில் காத்திருந்து நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்களுக்கு சிரமம் இருந்து வருகிறது. இதனை தவிர்க்க பக்தர்கள் நன்கொடை செலுத்துவதற்காக க்யூ ஆர் கோடு வசதியினை இந்து சமய அறநிலைத்துறையினர் செய்தனர். இது குறித்த பிளக்ஸ் பேனர்கள் சென்னிமலை மீது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் கவுண்டரில் கி யூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு அது குறித்த தகவல், ரசீது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu