அரசு விரைவு பேருந்துகளில் இனி யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பேருந்துகளில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் யுபிஐ பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யுபிஐ மற்றும் ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெரும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட்ட 1068 பேருந்துகளிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி விரைவு பேருந்துகளில் ஜி பே, கிரெடிட், டெபிட் கார்ட் போன் பே மூலம் பணம் செலுத்தி இனி டிக்கெட் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது