சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் யூபிஐ பண பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளில் தற்போது விற்பனை முனைய இயந்திரம் மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட விரல் ரேகை பதிவுகளின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்ட வருகின்றன. இதில் பொருட்களுக்கு ரொக்கம் மூலம் பணம் வழங்குவதை தவிர்த்து டிஜிட்டல் பணவரவு பரிவர்த்தனையை செலுத்தும் வசதியை ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கட்டங்களாக சோதனை நடைபெற்றது. இது முதல் கட்டமாக சென்னை மற்றும் புறநகர் உள்ள பகுதிகள் 1700 நியாய விலை கடைகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 9200க்கும் மேற்பட்ட கடைகளில் யு பி ஐ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் க்யூஆர் கோடு குறியீட்டை பயன்படுத்தி தங்கள் கைபேசியின் மூலம் தொகையை செலுத்த முடியும். இதற்கான விழிப்புணர்வு பதாகைகள் நியாய விலை கடைகளில் வைக்கப்பட்டுள்ளன.