தமிழ்நாட்டில் 54,000 கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு செயல் இயக்குனர் வி சி அசோகன் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் பகுதியில் புதிதாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மதிப்பு 35580 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இங்கிருந்து, ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் ஆகியவை உற்பத்தி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 1775 பெட்ரோல் நிலையங்களை துவக்க உள்ளதாக கூறியுள்ளார். இவற்றில், இ 20 திட்டத்தின் கீழ் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். இவைத்தவிர, சமையல் எரிவாயு உருளைகள் விற்பனையிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.