கனடா நாட்டு நாடாளுமன்ற தலைவர் அந்தோணி ரோட்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை, நாஜி படை பிரிவை சேர்ந்தவருக்கு கனடா நாடாளுமன்றத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பயணத்தில் அவருடன் இணைந்து யரோஸ்லாவ் ஹூண்கா கனடா நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். அப்போது, அவர் உக்ரைன் படைப்பிரிவின் சார்பாக போர் புரிந்ததாக தவறாக எண்ணப்பட்டு, அந்தோணி ரோட்டா அவருக்கு புகழாரம் சூட்டினார். அவர் நாஜி படை பிரிவை சேர்ந்தவர் என தெரிய வந்ததும், ரோட்டாவுக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இதனால் ஏற்பட்ட தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரை பதவி விலகுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, ரோட்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.