பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான், இந்தியாவில் விரிவாக்க பணிகளை அதிகரித்துள்ளது. இதற்காக, 1.6 பில்லியன் டாலர்கள், அதாவது 13300 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், ஐபோன் உதிரி பாக தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதன் உற்பத்தி ஆலைகள் இந்தியாவில் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நிறுவனத்தின் ஆலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கர்நாடகாவில் 600 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக பாக்ஸ்கான் அறிவித்திருந்தது. தற்போது, விரிவாக்க பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், கூடுதல் முதலீடுகளை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.