ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி அதிரடி ஆக விளையாடியது. இதில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெங்கடேஷ் அரை சதம் அடித்தார். அதன்படி கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது