2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான நியூ ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா ஐந்து முறை கோப்பைகளை வென்றுள்ளது. இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை - பெங்களூர் அணிகள் மோதுகின்றன. போட்டியானது சென்னையில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தனது புதிய ஜெர்ஸியினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் சன்ரைசர்ஸ் நிர்வாகமும் தனது புதிய ஜெர்ஸியினை அறிமுகம் செய்துள்ளது.