ஐபிஎல் 2024 தொடரின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி இறுதி வரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். அதில் முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் வரை குவித்தன. அதனை தொடர்ந்து 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது. 261 என்னும் இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் பேர்ஸ்டோ பின்னர் அதிரடி காட்டி சதம் எடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 15 ஓவரில் 201 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.