ஐபிஎல் 2025-ம் ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2025-ம் ஆண்டு மெகா ஏலத்துக்கு முன்னதாக, அணிகள் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதை பிசிசிஐ அறிவிக்கவுள்ளது. முந்தைய ஏலங்களில் நான்கு வீரர்கள் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் அணிகள் ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மூன்று ஆர்.டி.எம் கார்டுகள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், சில அணிகள் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, இதனால் இறுதி முடிவு தாமதமாகியுள்ளது. மெகா ஏலத்தில், ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.