ஐபிஎல் 2025 மெகா ஏலம்: 24, 25 நவம்பருக்கு ரியாத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல் 2025 மெகா ஏலத்துக்கான அறிவிப்பு பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ, இந்த மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ள நிலையில், இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அந்தவகையில், அணிகளின் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடி மீதமுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியிடம் ரூ.41 கோடியும் உள்ளது.