ஐதராபாத் 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதைத் தொடர்ந்து, 155 ரன்கள் எடுக்க ஐதராபாத் களம் இறங்கியது. இஷான் கிஷன் 44 ரன்கள், டிராவிஸ் ஹெட் மற்றும் அனிகெட் வர்மா தலா 19 ரன்கள் எடுத்தனர். இறுதியில், ஐதராபாத் 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ஐதராபாத் அணிக்கு 3வது வெற்றியாகும், மற்றும் சென்னை அணிக்கு 7வது தோல்வி.