ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது, இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் ஆடி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே இறுதியில் 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றியாகும். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்தப் போட்டியில் 6வது தோல்வியை தழுவியுள்ளது.