துபாயில் நாளை ஐ.பி.எல் ஏலம்

December 18, 2023

ஐ பி.எல் போட்டிக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் நாளை நடைபெறுகிறது. ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது இதன் அடுத்த போட்டி மார்ச் 23ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்கள் விவரத்தை ஏற்கனவே அறிவித்துவிட்டன. இதற்காக டிரேடிங் முறையில் வீரர்களை அணிகள் தங்களுக்குள் மாற்றிக் கொண்டனர். தற்போது ஐபிஎல் போட்டிக்கான […]

ஐ பி.எல் போட்டிக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் நாளை நடைபெறுகிறது.

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது இதன் அடுத்த போட்டி மார்ச் 23ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்கள் விவரத்தை ஏற்கனவே அறிவித்துவிட்டன. இதற்காக டிரேடிங் முறையில் வீரர்களை அணிகள் தங்களுக்குள் மாற்றிக் கொண்டனர். தற்போது ஐபிஎல் போட்டிக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் நாளை நடைபெற உள்ளது. இது இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் இதனை நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. இதில் மொத்தம் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் 214 பேர் இந்தியர்கள், 119 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் அசோசியேட் நாடுகளில் இருந்து இரண்டு வீரர்கள் இடம்பெற உள்ளனர்.

இந்த ஏலத்தில் மொத்தம் 77 வீரர்கள் எடுக்கப்படுவார்கள். இதில் 30 பேர் வெளிநாட்டவர்களுக்கான இடமாகும். 10 அணிகளும் 77 வீரர்களை தேர்வு செய்வதற்காக மொத்தம் ரூபாய் 262.95 கோடியை வைத்துள்ளனர். இந்த ஏலத்தில் ஸ்டார்க், கம்மின்ஸ், ரச்சின் ரவீந்தரா, கோயாட்சி, ஹசரங்கா, ஹர்சல் படேல், ஷாருக்கான் ஆகியோர்களில் அதிக விலைக்கு போகப்போகும் வீரர் யார் என்று ஆவல் அதிகரித்து வருகிறது. இந்த ஏலத்தில் பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர்கள், பவுலர்கள், விக்கெட் கீப்பர்கள் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் 23 வீரர்களுக்கு ரூபாய் 2 கோடி அடிப்படை விலையாகவும், 13 வீரர்களுக்கு ரூபாய் 1 1/2 கோடி அடிப்படை விலையகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu