டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய லக்னோ அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து ஆட்டம் முடிவுற்றது. இந்த விளையாட்டில், டெல்லி அணியின் முகேஷ் குமார் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்பிறகு, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களத்தில் இறங்கியது. இந்த அணியில் அபிஷேக் போரல் 51 ரன்கள் மற்றும் கருண் நாயர் 15 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு, ராகுல் மற்றும் படேல் தங்களின் சிறந்த ஆட்டத்தைக் காட்டினர். இறுதியில், டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி ஆட்டத்தை கைப்பற்றியது.