தமிழகம் முழுவதும் 37 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11 ஆம் தேதி 12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 16 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழக முழுவதும் 37 டிஎஸ்பிக்கள் இதுவரை பணியிட மற்றும் செய்யப்பட்டுள்ளனர். இதில் நீலாங்கரை காவல் சரக உதவி ஆணையராக இருந்த சுதர்சன் தி நகருக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் மணலியில் இருந்த தக்ஷிணாமூர்த்தி, தஞ்சையில் இருந்த சரண்யா சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கும் காத்திருப்பு பட்டியலில் இருந்த கலியன் சென்னை பாதுகாப்பு பிரிவிற்கும், செங்கல்பட்டில் இருந்த பரத் நீலங்கரைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் பிறப்பித்துள்ளார்.