டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு பலத்த போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி அங்கு இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.