இஸ்ரேல் தாக்குதல் அபாயம் அதிகரித்து இருப்பதால் ஈரானில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஈரானில் இரவில் செல்லக் கூடிய அனைத்து விமானங்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியிலிருந்து திங்கள் கிழமை காலை 6 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்படும் என்று ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கிடையில், லெபனானின் பெய்ரூட் விமான நிலையத்திலிருந்தும் அனைத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகரித்து இருப்பதால், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன.














