ஈரான் - ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 2வது மரண தண்டனை நிறைவேற்றம்

December 12, 2022

ஈரானில் கடந்த சில வாரங்களாக ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில், கலாச்சார காவல் பிரிவு இந்த போராட்டத்தின் காரணமாக கலைக்கப்பட்டது. ஆனாலும், மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஹிஜாப் எதிர்ப்பாளர் ஒருவருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடவுளுக்கு எதிராக போர் தொடுத்ததன் காரணமாக மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, மோசன் சேகரி என்ற நபர் பாதுகாப்பு […]

ஈரானில் கடந்த சில வாரங்களாக ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில், கலாச்சார காவல் பிரிவு இந்த போராட்டத்தின் காரணமாக கலைக்கப்பட்டது. ஆனாலும், மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஹிஜாப் எதிர்ப்பாளர் ஒருவருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடவுளுக்கு எதிராக போர் தொடுத்ததன் காரணமாக மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மோசன் சேகரி என்ற நபர் பாதுகாப்பு காவல் அதிகாரியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில், மஜீத் ரெசா ரஹநாவார்ட் என்ற நபரை இன்று பொதுவெளியில் ஈரான் தூக்கிலிட்டு உள்ளது. இது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu