ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர்நிலையை முன்னிட்டு உடனடி உதவிக்காக கட்டுப்பாட்டு அறை செயல்பாடு – தமிழர்களின் நலனை காக்க நடவடிக்கை எடுத்து வரும் அரசு.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர்நிலையை முன்னிட்டு அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. தேவையுள்ள தமிழர்கள் 011-24193300 மற்றும் 9289516712 (வாட்ஸ்அப்) எண்கள் மூலம் தொடர்புகொண்டு உதவி பெறலாம்.