அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் இஸ்ரேலால் ஹமாஸ் தலைவர் படுகொலையை செய்ய இயலாது என ஈரான் வெளியுறவு துறை மந்திரி அலி பாகேரி கனி கூறினார்.
ஈரான் தலைநகர் இஸ்மாயில் ஹனியை கொல்லப்பட்டார். இந்நிலையில் இஸ்மாயில் படுகொலை மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் செய்ய சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரான் வெளியுறவு துறை மந்திரி அலி பாகேரி கனி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், இஸ்மாயில் படுகொலை மூலமாக ஈரானின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு எதிராக இஸ்ரேல் குற்றம் புரிந்துள்ளது. அந்த நாடு மக்கள் மற்றும் சட்டங்களை மதிக்காமல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த விதிமீறல்களுக்கு இஸ்ரேலை பொறுப்பேற்கும்படி ஐநா பாதுகாப்புக்கு கவுன்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த படுகொலைக்கு பொறுப்பானவர்களை விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் இஸ்ரேலால் இப்படி ஒரு படுகொலையை செய்ய இயலாது. எனவே அமெரிக்காவும் பொறுப்பேற்க வேண்டியதாக உள்ளது. அமெரிக்காவின் அனுமதியின்றி அவர்களுடைய உளவுத்துறை ஆதரவில்லாமல் இத்தகைய தாக்குதல் நடத்துவது இஸ்ரேலுக்கு சாத்தியம் இல்லை. இந்த விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், ஈரான் சட்டரீதியாக இஸ்ரேலை எதிர்கொள்ளும் என்று கூறினார்.