இஸ்ரேல் மீது ஈரான் 200 டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு கடந்த ஞாயிறு அன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு ஐநா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மற்றொரு போரை இந்த உலகம் தாங்காது என்று ஐநா சபை கூறியுள்ளது. இது பொறுப்பற்ற தாக்குதல் என்று இங்கிலாந்து கருத்து தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பிற நாடுகள் வலியுறுத்தி உள்ளன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை தொடரும் எண்ணம் இல்லை என்று ஈரான் தலைமை தளபதி முகமது ஹுசைன் கூறியுள்ளார். ஈரான் நாட்டின் நலனுக்கு கேடு விளைவிக்கும் எந்த முயற்சிக்கும் நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும் இஸ்ரேலுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதால் தாக்குதல் நடத்தினோம் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர் இஸ்ரேலுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.