ஈரான் நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டின் சபாநாயகர் பகேர் காலிபாப் வேட்பாளராக களமிறங்குகிறார்.
ஈரான் நாட்டு அதிபர் அதிபராக இருந்த இப்ராஹீம் ராய்சி அண்மையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. இந்த நிலையில், அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதில், அந்நாட்டின் நாடாளுமன்ற அவை தலைவர் முகமது பகேர் காலிபாப் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே, ஈரான் முன்னாள் அதிபராக இருந்த அகமதி நிஜாத் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.