ஈரானில் சரக்கு கப்பலில் சிக்கிய 16 மாலுமிகள் விடுவிப்பு

May 4, 2024

கடந்த மாதம் சரக்கு கப்பலில் சிக்கிய 16 இந்திய மாலுமிகளை ஈரான் விடுவித்துள்ளது. கடந்த மாதம் ஓமன் வளைகுடா பகுதியில் இஸ்ரேல் நாட்டுக்கு தொடர்புடைய எம் எஸ் சி ஏரிஸ் சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது. அப்போது அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உட்பட 25 பேர் இருந்தனர். இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்னர் ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சுமார் 20 நாட்களுக்குப் பிறகு […]

கடந்த மாதம் சரக்கு கப்பலில் சிக்கிய 16 இந்திய மாலுமிகளை ஈரான் விடுவித்துள்ளது.

கடந்த மாதம் ஓமன் வளைகுடா பகுதியில் இஸ்ரேல் நாட்டுக்கு தொடர்புடைய எம் எஸ் சி ஏரிஸ் சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது. அப்போது அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உட்பட 25 பேர் இருந்தனர். இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்னர் ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சுமார் 20 நாட்களுக்குப் பிறகு தற்போது 16 இந்திய மாலுமிகளை ஈரான் விடுவித்துள்ளது. அதோடு கப்பலில் இருந்த மற்றவர்களையும் விடுவித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவு துறை மந்திரி ஹுசைன் கூறுகையில், கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட எம்எஸ்சி ஏரிஸ் சரக்கு கப்பலில் வேலை செய்த அனைத்து மாலுமிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும். அனைத்து மாலுமிகளும் அவரவர் சொந்த நாட்டுக்கு திரும்பலாம். ஆனால் கப்பல் ஈரான் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu