ஈரான், 60% யுரேனியம் செறிவூட்டலில் ஈடுபடுகிறது

November 23, 2022

அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை 60% வரை செறிவூட்டத் தொடங்கி உள்ளதாக ஈரான் நாடு அறிவித்துள்ளது. முன்னதாக, யுரேனியம் 3.67% க்கு மேல் செறிவூட்டப்படாது என்று, ஈரான் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது, சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி செயல்படத் தொடங்கியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதனை எதிர்க்கும் விதமாக, ஈரான் இந்த செறிவூட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. யுரேனியத்தை 90% வரை செறிவூட்டினால், அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக […]

அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை 60% வரை செறிவூட்டத் தொடங்கி உள்ளதாக ஈரான் நாடு அறிவித்துள்ளது. முன்னதாக, யுரேனியம் 3.67% க்கு மேல் செறிவூட்டப்படாது என்று, ஈரான் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது, சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி செயல்படத் தொடங்கியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதனை எதிர்க்கும் விதமாக, ஈரான் இந்த செறிவூட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. யுரேனியத்தை 90% வரை செறிவூட்டினால், அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஈரானின் இர்னா செய்தி நிறுவனம், டெஹ்ரானில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் அமைந்துள்ள ஃபோர்டோ அணுசக்தி மையத்தில், யுரேனியம் 60% செறிவூட்டப்படுவதாக தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu