சிரியாவின் ஏவுகணைக் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின் அதிர்வுகளால் அருகில் நிலநடுக்கம் பதிவாகி, ரிக்டா் அளவுகோலின் 3.1 அலகுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையின்படி, இஸ்ரேல் ராணுவம், முன்னாள் அதிபர் அல்-அஸாத் படைகள் சேமித்துக் கொண்டிருந்த ஏவுகணைக் கிடங்குகளை குறிவைத்து அதிகாலை இத்தாக்குதலை நடத்தியது. இது, 2012-ஆம் ஆண்டு பிறகு சிரியாவில் நடத்தப்பட்ட மிக சக்திவாய்ந்த தாக்குதலாக அறியப்படுகிறது. டார்டஸ் நகருக்கு அருகிலுள்ள ஏவுகணைக் கிடங்கில் நடந்த தாக்குதலின் அதிர்வுகள், இஸ்ரேல் நிலநடுக்க ஆய்வு மையத்தில் 3.1 அளவிற்கு பதிவாகியுள்ளது.