அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி பதவியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஈரானின் ரியால் கரன்சி மதிப்பு பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
டாலருக்கு நிகரான ரியால் 703,000 ஆக கீழே இறங்கியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 2015-ல், உலக வல்லரசு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஈரான் அணுசக்தி அமைப்பின் போது, ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு 32,000 என்ற நிலைக்கு இருந்தது. 2024 ஜூலை மாதத்தில், புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பதவியேற்றபோது, ரியால் 584,000 ஆக இருந்தது. தற்போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலவரங்கள் காரணமாக, ஈரான் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. 1979-ல் அமெரிக்கத் தூதரகம் கையகப்படுத்தப்பட்ட பின்னர், 45 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் தொடர்கின்றன.