ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் ஹுசைன் அமீர் நேற்று பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் இவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவது, ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் ஹுசைன் அமீர் நேற்று பாகிஸ்தான் வந்தார். இங்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜில்லானியை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் பிரதமர் அன்வர் கக்காரையும் அவர் சந்திப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்திய வான்வழி தாக்குதலால் எழுந்த பதற்றத்தை தனித்து தூதரக உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதி தான் இந்த சுற்றுப்பயணம் ஆகும்.