ரயில் பயணிகளுக்கு, நேரடியாக ரயிலிலேயே உணவு கொண்டு சேர்க்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக, ஐஆர்சிடிசி, ஸ்விக்கி நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்துள்ளது. முதற்கட்டமாக, பெங்களூரு, புவனேஸ்வர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 4 ரயில் நிலையங்களில் ஸ்விக்கி உணவு சேவை அறிமுகம் செய்யப்படுவதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
ரயில் பயணிகள், ஐ ஆர் சி டி சி தளத்தில் முன்கூட்டியே உணவுக்காக ஆர்டர் செய்ய வேண்டும். அவ்வாறு ஆர்டர் செய்பவர்களுக்கு, நேரடியாக ஸ்விக்கி மூலம் ரயிலில் உணவு விநியோகிக்கப்படும். முன்னதாக, ஜொமாட்டோ நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்து, பல்வேறு வடமாநில ரயில் நிலையங்களில் ஐஆர்சிடிசி உணவு விநியோக சேவை தொடங்கப்பட்டது. தற்போது, தென் மாநிலங்களை சேர்ந்த முக்கிய ரயில் நிலையங்களில் ஸ்விக்கி சேவை தொடங்கப்படுகிறது.