IREDA நிறுவனத்தின் பங்குகள் இன்று கிட்டத்தட்ட 17% அளவுக்கு உயர்வடைந்துள்ளது. மேலும், கடந்த ஐந்து அமர்வுகளில் கிட்டத்தட்ட 25.12% அளவுக்கு நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது.
IREDA நிறுவனத்தின் பங்குகள் இன்று புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளன. நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளியாவதை ஒட்டி பங்குகள் உச்சம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குகள் உயர்ந்துள்ளதால் IREDA நிறுவனத்தின் சந்தை மதிப்பு 75000 கோடியாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளதே பங்கு உயர்வுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஜூன் மாத இறுதி நிலவரப்படி, வெளிநாட்டு முதலீடுகள் கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்து 2.7% அளவுக்கு பங்கு பங்களிப்பு கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.