வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக டிசம்பர் 26 ஆம் தேதி வரை நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் ஒன்பதாம் தேதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனை அடுத்து கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை வைகை அணையில் இருந்து 15 நாட்களுக்கு மொத்தம் 2466 மி.கன அடி தண்ணீர் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு திறந்து விடப்பட்டது.
இதனை அடுத்து வைகை அணையில் மீண்டும் டிசம்பர் 11ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.இதனால் ஆற்றங்கரை அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.