இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களை 10% முதல் 20% வரை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டின் இறுதிக்குள், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களை 10% முதல் 20% வரை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்கள், ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விகிதங்களை மாற்ற உள்ளன.
2019க்குப் பிறகு இது நான்காவது பெரிய கட்டண உயர்வாகும். 5G நெட்வொர்க் முதலீடுகள் மற்றும் அதிகரிக்கும் செயல்பாட்டு செலவுகள் இந்த உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன.
ரூ.100–200 திட்டங்கள் 10% உயரலாம்; ரூ.300–500 திட்டங்கள் 15% வரை அதிகரிக்கலாம்; பிரீமியம் 5G திட்டங்கள் 20% வரை உயர வாய்ப்பு உள்ளது.