பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அட்டாக் சிறையில் இருந்து அடியாலா சிறைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் ஐந்தாம் தேதி தோஷக்கான ஊழல் வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனையடுத்து அவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிடையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது அவருடைய உடல் நலம் மற்றும் சமூக அரசியல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏ வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்ற இம்ரான் கான் தரப்பில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.