தமிழ்நாட்டில் 5,784 ரேசன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 35,941 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 26,018 முழுநேரக் கடைகளும், 9,923 பகுதிநேர கடைகளும் அடங்கும். கடந்த ஆண்டில் மட்டும் 5,784 நியாயவிலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறப்பட்டு உள்ளன. நடப்பாண்டில் கூடுதலாக 5 ஆயிரம் நியாய விலைக்கடைகளை புனரமைத்திடவும், கூடுதலாக 2 ஆயிரத்து 500 நியாயவிலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றிடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.