காசா போா் 2024 முழுவதும் தொடரும் - இஸ்ரேல்

January 2, 2024

2024 ஆம் ஆண்டு முழுவதும் காசாவில் போர் தொடரும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் கூறியுள்ளதாவது, காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையே 2024 ஆம் ஆண்டு முழுவதும் போர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போரில் இலக்குகளை எட்ட இஸ்ரேல் நீண்ட காலம் போரிட வேண்டியுள்ளது. அதற்கு ஏற்றவாறு வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மூன்று லட்சம் ரிசர்வ் வீரர்கள் வரும் […]

2024 ஆம் ஆண்டு முழுவதும் காசாவில் போர் தொடரும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் கூறியுள்ளதாவது, காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையே 2024 ஆம் ஆண்டு முழுவதும் போர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போரில் இலக்குகளை எட்ட இஸ்ரேல் நீண்ட காலம் போரிட வேண்டியுள்ளது. அதற்கு ஏற்றவாறு வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மூன்று லட்சம் ரிசர்வ் வீரர்கள் வரும் வாரங்களில் திரும்ப அழைக்கப்பட உள்ளனர். அவர்களில் பலர் பணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்கள். இதன் மூலம் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் குறையும். அதோடு பலத்தை பெருக்கிக் கொண்டு இந்த ஆண்டில் திறம்பட போரை கையாள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி பலியாகினர். புத்தாண்டு அன்றும் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு இடையே போர் நடைபெற்று வந்தது. காஜாவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை ராணுவம் ராக்கெட் வெடிகுண்டுகள் வீசி தகர்த்தது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu