கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று இஸ்ரேலுக்கு ராணுவ உடைகளை தயாரித்து வழங்கி வருகிறது.இஸ்ரேல் மற்றும் காசா போரின் எதிரொலியாக ராணுவ சீருடைகளை தயாரித்து தர முடியாது என கேரள மாநிலத்தில் உள்ள ஆடை நிறுவனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கண்ணூர் அருகே உள்ள தொழிற்பேட்டையில் மரியன் அப்பேரல்ஸ் எனும் ஆடை நிறுவனம் 1500 தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இஸ்ரேல், கத்தார், பிலிப்பைன்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு ராணுவ சீருடைகளை தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடைகளை தயாரித்து வழங்க முடியாது எனவும், ஒரு லட்சம் சீருடைகளுக்கான ஆர்டர்களை இந்த நிறுவனம் ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.