இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் பிணைக்கைதிகள் விடுவிப்பு

February 15, 2025

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த சனிக்கிழமை, ஹமாஸ் அமைப்பு மேலும் 3 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கிடையிலான போர், 15 மாதங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. 2023-ம் ஆண்டின் இறுதியில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு புகுந்து பலர் மீது தாக்குதல் நடத்தி, 250-க்கும் மேற்பட்டோரைக் கைதிகளாக பிடித்தனர். பின்னர், தற்காலிக போர் நிறுத்தத்தில் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர், ஆனால் 94 பேர் இன்னும் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளனர், […]

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த சனிக்கிழமை, ஹமாஸ் அமைப்பு மேலும் 3 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கிடையிலான போர், 15 மாதங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. 2023-ம் ஆண்டின் இறுதியில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு புகுந்து பலர் மீது தாக்குதல் நடத்தி, 250-க்கும் மேற்பட்டோரைக் கைதிகளாக பிடித்தனர். பின்னர், தற்காலிக போர் நிறுத்தத்தில் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர், ஆனால் 94 பேர் இன்னும் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளனர், இதில் 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த சனிக்கிழமை, ஹமாஸ் அமைப்பு மேலும் 3 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அந்த 3 பேர் யாஹர் ஹரன் (46), அலெக்சாண்டர் ருபெனோ (29), சஹொய் டிகெல் ஷென் (36) ஆகியோர் ஆவர்.இதற்குப் பதிலாக, இஸ்ரேல் 369 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது, இதில் 36 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர்.இதுவரை, ஹமாஸ் இஸ்ரேலிய பிணைக்கைதிகளிலிருந்து 21 பேரை விடுவித்துள்ளது, மேலும் இஸ்ரேல் 750-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu