இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் தொடங்கியது - பிணைக் கைதிகள் விடுவிப்பு

November 24, 2023

ஒரு நாள் தாமதத்திற்கு பிறகு, இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் இன்று காலை தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று, ஹமாஸ் தரப்பில் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட இஸ்ரேல் பெண்கள் மற்றும் குழந்தைகள் 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயத்தில், இஸ்ரேல் சிறைகளிலிருந்து 24 பெண்கள் மற்றும் 15 இளைஞர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.உள்ளூர் நேரப்படி, இன்று காலை 7 மணி முதல் போர் நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உள்ளூர் நேரப்படி இன்று மாலை […]

ஒரு நாள் தாமதத்திற்கு பிறகு, இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் இன்று காலை தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று, ஹமாஸ் தரப்பில் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட இஸ்ரேல் பெண்கள் மற்றும் குழந்தைகள் 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயத்தில், இஸ்ரேல் சிறைகளிலிருந்து 24 பெண்கள் மற்றும் 15 இளைஞர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.உள்ளூர் நேரப்படி, இன்று காலை 7 மணி முதல் போர் நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு காரணமான கத்தார் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். அத்துடன், தொடர்ந்து வரும் 4 நாட்களில், 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர் என அவர் கூறியுள்ளார். போர் நிறுத்த சமயத்தில், நிவாரண பொருட்கள் மற்றும் எரி பொருட்கள் அடங்கிய 200 வாகனங்கள் காசாவுக்குள் நுழையும் என கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், 4 நாட்கள் நிறைவடைந்த பிறகு. மீண்டும் போரில் ஈடுபட உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu