இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் இன்று கிட்டத்தட்ட 5% வரை கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், போர் நீடிக்கும் சூழல் அதிகமாக காணப்படுவதால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கம் ஏற்படும் என கருதப்படுகிறது. சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் சூழலில், கச்சா எண்ணெய் விலை உயர்வு அதனை மேலும் தீவிரப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.