இஸ்ரேல் போர் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பலி எண்ணிக்கை 8000-ஐ கடந்தது என்று கூறப்படுகிறது. இந்தப் போர் தற்போது மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த போரில் மூவாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இஸ்ரேல் காசா மீது தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது. இஸ்ரேல் பீரங்கி படைகள் நகருக்குள் ஊடுருவி கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் காசாவில் சுரங்க குழிக்குள் பதுங்கியுள்ளனர். சுமார் 450-க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் மீது குண்டு வீசி இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தியது.இதற்கிடையே காசா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அங்குதான் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். எனவே அந்த இடத்தை விட்டு பொதுமக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போர் மிகவும் தீவிரமடையும் சூழல் நிலவுகிறது.