தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக உடனடி நடவடிக்கைககளில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. காசாவில் இறப்பு எண்ணிக்கை 40,000 ஐ நெருங்குகிறது. ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதில் இருந்து பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகத் தலைவர்கள் போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் போன்ற நாடுகள் இஸ்ரேலும் ஹமாஸும் ஆகஸ்ட் 15 அன்று பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. பரவலான அழிவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் காரணமாக அங்கு நிலைமை மோசமாக உள்ளது.