இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தீவிர வான்வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி தந்துள்ளது. லெபனான் மீது நேற்று அதிகாலை தீவிர வான்வழி தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது.
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கிட்டத்தட்ட 100 போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நட்டாப் சஷானி இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் இருவர் காயம் அடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், லெபனானும் இஸ்ரேல் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இருதரப்பிலும் சேதங்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.