கடந்த 24 மணிநேரத்தில் லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 36 பேர் பலியாகினர். மேலும் 150 பேர் படுகாயமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதலை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. லெபனானின் சுற்றுச்சூழல் மந்திரியான நாசர் யாசின் கூறியது போல, கடந்த 24 மணிநேரத்தில் 137 வான்வழி தாக்குதல்கள் பதிவாகி உள்ளன. மொத்தமாக, 9,400 தாக்குதல்கள் நடந்துள்ளன. புலம்பெயர்பவர்களை தங்க வைக்க 990 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 781 மையங்களில் அதிகளவிலான மக்கள் தங்கியிருக்கிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் உயிரிழந்த நிலையில், 150 பேர் காயமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், இஸ்ரேலின் தாக்குதல்களில் மொத்தம் 2,119 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,019 பேர் காயமடைந்துள்ளனர்.