கிழக்கு லெபனானின் கவர்னரேட் பால்பெக்-ஹெர்மெல் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 47 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர் என்று கவர்னர் பச்சீர் கோடர் தெரிவித்தார்.
கவர்னரேட்டின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அழிந்த வீடுகளின் இடிபாடுகளில் இருந்து காணாமல் போனவர்களை மீட்புக் குழுக்கள் தேடி வருகின்றன. இஸ்ரேலிய ராணுவம் நேற்று தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் 48 வான்வழி தாக்குதல்களை நடத்தியது. அதே சமயம், தெற்கு லெபனானில் உள்ள 18 எல்லை நகரங்கள் மற்றும் கிராமங்களை குறிவைத்து சுமார் 100 குண்டுகள் வீசப்பட்டதாக லெபனான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.