ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகள் கடத்தப்பட்டதை மீட்கும் முறையில் இஸ்ரேல் அரசின் செயல்பாடுகளை எதிர்த்துப் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காஸாவில் இருந்து மேலும் ஆறு பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தெற்கு காஸாவின் ராஃபா பகுதியில் சுரங்க அறையில் இருந்த ஆறு சடலங்களை சனிக்கிழமை இஸ்ரேல் படையினர்கள் மீட்டனர். அவர்களின் உடற்கூறு ஆய்வில், சில மணி நேரத்திற்கு முன்னர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆா்ப்பாட்டங்கள் நடந்தன. அதோடு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கிட்டயே ஹிஸ்டாட்ரட் தொழிற்சங்கம் திங்கள்கிழமை அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளது.