இஸ்ரேல் படையால் 78 ஹிஸ்புல்லா அமைப்பினர் பலி

November 11, 2023

லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் சுமார் 78 பேர் இதுவரை இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டனர் என தகவல் வந்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் ஏழாம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் இந்த போரில் நேரடியாக பங்கேற்காமல் எல்லைக்கு அப்பால் இருந்து லெபனான் பகுதியிலிருந்து இஸ்ரேல் போர் நிலைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்த […]

லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் சுமார் 78 பேர் இதுவரை இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டனர் என தகவல் வந்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் ஏழாம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் இந்த போரில் நேரடியாக பங்கேற்காமல் எல்லைக்கு அப்பால் இருந்து லெபனான் பகுதியிலிருந்து இஸ்ரேல் போர் நிலைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. அதில் சுமார் 71 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று நடந்த தாக்குதலில் மட்டும் அந்த அமைப்பை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இந்த போரில் உயிரிழந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் இந்த போர் காசாவில் இருந்து பிற பகுதிகளுக்கும் பரவும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu