வடகாசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் இன்னும் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இந்த போரில் ராணுவ பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. காசாவில் ஹமாஸ் அமைப்பினை சேர்ந்தவர்களை முற்றிலும் அழிக்கப் போவதாக கூறியுள்ளது.அதோடு பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேலின் விமான படையினர் விரைவில் நான் திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 18 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
வடகாசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் இன்னும் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் மற்றும் சபையின் பள்ளிகள் உள்பட அனைத்து இடங்களில் தங்கி இருக்கும் பாலஸ்தீனியர்களையும் உடனே வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு காஜாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வேண்டும் என்று வானிலிருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.