காசாவின் ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் போர் தொடுப்பது தொடர்பான அவசர விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடங்கியுள்ளது.
காசாவின் ரபா நகருக்குள் இஸ்ரேல் ராணுவம் படையெடுப்பது தொடர்பாக நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவசர விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த போர் தொடர்பாக அந்த நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா மனு தாக்கல் செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் ரபா படையெடுப்பை தடுக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தது. தற்போது ரபா நகரின் எல்லை வழிதடத்தை இஸ்ரேல் கைப்பற்றி ராணுவம் முன்னேறி வருவதால் இது தொடர்பாக அவசர விசாரணை நடத்த வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா நீதிமன்றத்தை கோரியுள்ளது. அந்த கோரிக்கையை ஏற்று இந்த வழக்கின் மூன்றாவது கட்ட விசாரணையை நீதிமன்றம் தொடங்கியுள்ளது.
விசாரணையின்போது இஸ்ரேல் வழக்கறிஞர் தமர் கூறுகையில், பொதுமக்கள் உயிரிழப்பை குறைக்க வேண்டும் என்பதில் இஸ்ரேல் கவனமாக உள்ளது என்று கூறினார். ரபா நகருக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தால் அங்குள்ள பாலஸ்தீனர்கள் அழிய நேரிடும் என்று தென்னாப்பிரிக்க தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.