இஸ்ரேல் ராணுவம் தற்போது தெற்கு காசாவிலும் போரிட தயாராகி வருகிறது. இதனால் தெற்கு காசாவில் உள்ள மக்கள் மத்திய தரைக்கடல் பகுதியான மவாசி நகருக்கு இடம்பெயர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அந்த நகரம் சில சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்டுள்ளது. அங்கு பெருமளவிலான காசா மக்கள் தஞ்சம் புக முடியாது. இதனால் இஸ்ரேலின் இந்த அறிவிப்பை ஐநா சபையின் மனிதாபிமான நிறுவனம் நிராகரித்து விட்டது. இதற்கிடையே காசாவில் ஐநா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நிவாரண பணிகள் தேக்கம் அடைந்து உள்ளது. இந்த எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தகவல் தொடர்பு சேவை முற்றிலும் முடங்கி விட்டது. இதனால் நேற்று இரண்டாவது நாளாக நிவாரண பணிகள் நிறுத்தப்பட்டன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தேவையான இடங்களுக்கு பொருட்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தினசரி உணவு தேவையில் பெரும் 10% மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. இதனையடுத்து காசாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் எரிபொருள் அனுப்ப இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.